Monday, December 23, 2013

எதிர் கட்சி இல்லாத சிக்கிம் முதல்வர் - சாதனை முதல்வர் பவன் குமார்

சாதனை முதல் அமைச்சர் " பவன் குமார் சம்ளிங் : -- ராஜ்மோகன் கே எஸ் தன்னைத்தானே சிறந்த முதல்வர் என்று சுய விளம்பரம் தேடும் முதல்வர்களுக்கு மத்தியில் எதிர்கட்சியே இல்லாமல் மக்களின் ஏகோபித்த தலைவனாக பணியாற்றிவரும் சிக்கிம் முதல் ஒரு முன்மாதிரி. தேர்தல்களில் தொடர்ந்து ஒரு கட்சியோ முதல்வரோ தேர்ந்து எடுக்கப்பப்படுவதை சாதனையாகக் கணக்கிட்டால் அதன் உச்சத்தை எட்டியவர் சிக்கிம் முதல்வர் P.K. சாம்லிங் அவர்கள் தான். இவருடைய கட்சியின் பெயர் " சிக்கிம் டெமோக்ரடிக் பார்ட்டி ( சிக்கிம் ஜனநாயகக் கட்சி ). இவர் கட்சி ஆரம்பித்து(1993) ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்(1994). 2004 சட்டமன்றத் தேர்தலில் இவரது தலைமையிலான SDF மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 ஐ வென்று எதிர்க்கட்சிக்கு ஒற்றை இடத்தை மட்டுமே விட்டு வைத்தது. 2009 சட்டமன்ற தேர்தல் மகுடம்.மொத்தமுள்ள 32 தொகுதிகளையும் P.K. Chamling அவர்கள் தலைமையிலான SDF வென்று ஆட்சி செய்து வருகிறது.அங்கு எதிர்கட்சியே இல்லை. இவர் 1982 இல் பஞ்சாயத்து தலைவராக ஜெயித்த இவர் , 1985 முதல் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றார். இவரன் சாதனைகள் : இவரது சமுக மற்றும் சீர்திருத்தவாதப் பணிகளில் பள்ளிகளுக்கு இலவச நிலம் வழங்கியது நிலமில்லா ஏழைகளுக்கு "விவசாயம் செய்ய இலவச நிலம் வழங்கியது . வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டமும் துவக்கப் பட்டு உள்ளது . தற்போதைய அரசாங்கத்தில் , தம்முடைய அரசின் திட்டங்களில் எழுபது சதவிகிதத்தை "கிராமப் புற வளர்ச்சி திட்டங்களுக்கும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும்" ஒதுக்கி வருகின்றார் . இவரின் அரசு தம்முடைய கடமையாக , ஏழை மற்றும் ஆதரவில்லாத தினக் கூலிகளின் சம்பளம் உயர்விற்காக போராடி, தற்பொழுது தினக் கூலிகளின் சம்பளம் இரு மடங்காக உயர வழிவகை செய்யப் பட்டுள்ளது
பெண்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு வழங்குவதற்கும் மற்றும் குடும்பக் கட்டுப் பாட்டை ஊக்கப் படுத்துவதற்கும் , " திட்டமிட்ட குடும்பம் " எனும் திட்டம் பெண்களுக்காகவே 2007 ஆண்டு முதல் செயல் படுத்த பட்டு வருகின்றது. சிக்கிம் அரசாங்க வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 % மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகின்றது. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசச் சீருடை வழங்கப் படுகின்றது. அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்களும் பயிற்சி ஏடுகளும் இலவசமாக வழங்கப் படுகின்றன. கல்லூரி படிப்பு வரை கல்வி இலவசம் ஆக்கப் பட்டு உள்ளது இவரின் அரசியல் குறிக்கோள் , "கூலித் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய வெகுமதியை பெற வேண்டும் என்பதே ஆகும். இவரது வரலாற்று சிறப்பு மிக்க பங்களிப்பு : "இந்திய தேசியத்தின் நீரோடையின் பக்கம் சிக்கிம் மக்களை " ஒன்றாக கலந்திடச் செய்ததில் , அவர்களை தேசபக்தி கொள்ள செய்ததில் இவரது பங்கு அனைவராலும் போற்றப் பட்டுள்ளது . அதற்காக அவர் பாரத் சிரோமணி எனும் உயரிய விருதை பெற்று உள்ளார் . மதச் சண்டை மற்றும் சாதிச் சண்டைகளை தடுக்கத்தவறி , மக்களை பிளவுப் படுத்தி, அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில் , கார்ப்பரேட் கம்பனிகளுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி அவர்கள் மூலமே போலி பிரச்சாரங்களை முன்னெடுத்து பிரதமர் கனவில் வாழும் முதல்வர்களுக்கு மத்தியில் சத்தம் இன்றி சாதனை படைத்து வரும் பவன் குமார் சாம்ளிங் அவர்களுக்கு ஒரு மனமார்ந்த வணக்கம் ! பச்சையை ஆடையில் மற்றும் சுற்றுச் சூழலை பேருந்திலும் மட்டுமே பயன்படுத்தும் முதல்வர்களுக்கு இடையே , " இந்தியாவின் படு பச்சையான முதல்வர் விருது (1998 )" அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தால் வழங்கி கௌரவிக்கப் பட்டார். இவர் ஒரு நேபாள மொழி எழுத்தாளர் மற்றும் இயல்பிலேயே கவிதை எழுதும் திறமை பெற்ற இவரது கவிதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளன. சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் தலைமைப் பண்பிற்காக விருது (2009) உலக அமைதி- தமிழ் ஈழத்திற்கான மாணவர்கள கூட்டமைப்பு வழங்கி கௌரவித்தது. சிக்கிம் மணிபால் பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. அமைதிக்கான தூதர் விருது பலவற்றை வாங்கி உள்ளார் . Dedicated to #NaMo fans.

No comments:

Post a Comment